Pages

May 6, 2016

செவ்வண்ணமேனியாள்.


நெஞ்சம் எங்கும்
நினைவாலே நிலைத்தவள்
நித்தம் என் நினைப்பினில்
நீர்க்கமற நிறைந்தவள்
உடல் முழுதும் தழுவி
உவகை தருபவள்
உதடுகளின் இடை புகுந்து
உல்லாசமாய் நுழைந்தவள்
நாசி வழி புகுந்து
நாபிக் கமலத்தை நிறைப்பவள்
துள்ளி ஓடும் குருதியிலும்
தீர்க்கமாய் நிறைந்தவள்
அள்ளி ஆசையோடு முத்தமிடும்
அழகுச் செவ்வண்ண மேனியாள்
நிகரில்லா அவள் வனப்பின்
நினைவுகளைச் சுமக்கிறேன்
நித்தமும் அவள் மடி துயிலவே
தகிக்கிறேன் தவிக்கிறேன்
நாடிச் சென்று அவள் மேனி தழுவ
நாதியற்று நிற்கிறேன்...

#ஈழத்துப்பித்தன்
06.05.2016

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.