Pages

May 13, 2016

முள்ளிவாய்க்கால் பேரவலம்


முள்ளிவாய்க்கால் பேராவலம்
முடிவில்லா ஓர் அவலம்
பன் நாட்டுப்படை புகுந்து
பல்லாயிரம் உயிர் தின்று
சொல்லாத கதை கோடி
சுமந்து கிடக்கும் மண்ணது
வில்லாண்ட இனம் ஒன்று
வீறுகொண்டு போர் கண்டு
விடுதலைக்காய் வேள்வியொன்றை
விருப்புடனே நடத்தியதையை
கண் காணச் சகிக்காத
காடையர்கள் கூட்டிணைவில்
இனம் ஒன்று அழிந்ததுவே
ஈரல் குலை அறுந்ததுபோல் தவித்தோமே
பல தேசம் வாழ்ந்தோம்
பார் எங்கும வீதி வழி குவிந்தோம்
பலனேதும் கிடைக்காமல்
பரிதவித்து பைத்தியமானோம்
இனப்படுகொலை ஒன்றை
இரக்கமின்றி சத்தமின்றி அரங்கேறி
இந்தியப் பெருங்கடலும் செந்நிறமாக
இடி வீழ்ந்துபோல் கிடந்தோமே
இமை மூட மறந்தோமே
ஆண்டுகள் ஏழு
அனல் இடை கரைந்து
அரவணைக்க ஆரும் இன்றி
அரற்றிக் கிடக்கிறோம் நாம்

எங்கள் இரத்த உறவுகளே!
ஆறாக உங்கள் இரத்தம்
அலை புரண்டு ஓடி
ந்ந்திக் கடல்
செங்கடல் ஆனபோதும்
அகிலம் முழுதும்
பரந்து கிடந்த எம்மால்
எதுவுமே செய்ய
முடியவில்லையே
என்ற குற்ற உணர்வும்
இயலாமையும்
கண்களைக்குளமாக்க
உங்களை இழந்த நினைவுகளோடு....
எங்கள் உரிமையை வென்று
உலக அரங்கில்
எமக்கான நீதியைப்பெற
அணிதிரள்வோம்
அலை அலையாய்....
ஓரணியில்..

#ஈழத்துப்பித்தன்
02.05.2016

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.