Pages

May 31, 2016

அறிவுத் தேடல் அழிக்க முடியாததே



ஒற்றைப் புத்தகம் வைச்ச இடம் மறந்தாலே
உள்ளம் பதை பதைக்கும்
எங்கள் ஊரின் மொத்தப் புத்தகமும்
அங்கைதான் குவிச்சுக் கிடந்ததாம்
ஓலைச்சுவடி முதல்
ஊர்களின் வரலாறும் தொன்மையும்
சொல்லும் அத்தனை நூலும்...
குறிப்பா இலங்கைத் தீவே தமிழன்ரை
எண்டதை பொழிப்பாச் சொல்லுற ஆவணமெல்லாம்
தென்னாசியாவிலை பெரிய நூலகம்
இதுவெண்டு  எல்லாரும்
புழுகமாச் சொல்லிச் சொல்லி
செருக்குப் படுறவையாம்
கல்வி அறிவிலை உலக அறிவிலை
தமிழன் கொடி கட்டிப் பறக்க
இதுதான் காரணமெண்டதை
எல்லாரும் அறிஞ்சதாலை
எப்பவும் அதுக்கு தனி மவுசுதானாம்
கல்வி அறிவைச் சிதைச்சால்
கண்டபடி தமிழனாலை வளரேலாது
எண்டு கற்பனை கட்டின சிங்களம்
இரவோடு இரவா வந்து உயிரோடை
கொள்ளி வைச்சுப் போனதாம்
அப்பிடிச் செய்து அரிய பொக்கிசத்தை
அழிச்சு ஒழிச்சாலும் தமிழன்ரை
அறிவுத் தேடலை அழிக்க முடியாமல்
தோத்தது சிங்களம் எண்டது உண்மையே
எரிஞ்ச அந்தச் சாம்பல் மேட்டிலை இருந்து
இண்டைக்கு உலகமெங்கும்
தமிழன் வாழுற நாடுகளிலை எல்லாம்
புத்தக வெளியீடும் நூலகமும்
வீட்டுக்கு வீடு புத்தக்க் களஞ்சியமுமா
உருவங்கொண்டு எழும்பி நிக்குது
ஆயிரந்தான் கிடந்தாலும்
தமிழன்ரை அறிவுத்தேடல் அழிக்க முடியாததே.

#ஈழத்துப்பித்தன்
31.05.2016

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.